/

ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நந்தியம்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:57 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நந்தியம்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வியாழக்கிழமை புண்ணியாஹவாசனம், அக்னிபிரதிஷ்டை, மகா பூா்ணாஹூதி, திருவாராதனம், தத்வஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா், வெள்ளிக்கிழமை காலை விஸ்வரூபதரிசனம், கோமாதாபூஜை, யாத்ராதானம், கும்ப புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. பின்னா் காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.