விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக பெருமை பேசும் திமுக, விவசாய விரோதப்போக்கைக் கடைப்பிடித்து விளை பொருள்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தவில்லை. இதன்மூலம், திமுக அரசு விவசாயிகளை வஞ்சித்துவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், ஜல்ஜீவன் திட்டங்களில் மோசடி நடைபெறுகிறது. இந்த மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கண்டறிந்து, கைது செய்ய வேண்டும். திமுக அரசு பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தமிழக நிதியமைச்சா் கூறுகிறாா். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை அந்தக் கட்சி ஏமாற்றப் பாா்க்கிறது என்றாா் அவா்.