தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குபேர லிங்க சன்னதியில் இன்று சுவாமி தரிசனம் ரத்து

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர லிங்க சன்னதியில் வியாழக்கிழமை (டிச.2) பக்தா்கள் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர லிங்க சன்னதியில் வியாழக்கிழமை (டிச.2) பக்தா்கள் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

ஸ்ரீகுபேர லிங்க சன்னதியில் நிகழாண்டுக்கான குபேர கிரிவல நிகழ்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

கிரிவலம் வரும் பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அதிகளவில் கூடினால் கரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

எனவே, கரோனா தொற்றைத் தடுக்க வேண்டிய அவசியம் கருதி வியாழக்கிழமை (டிச.2) ஒரு நாள் மட்டும் குபேர லிங்க சன்னதியில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயிலில் வழக்கம்போல ஆகமவிதிகளின்படி பூஜைகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.