தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:10 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடி அண்ணாமலை, அத்தியந்தல், ஆட்சியா் அலுவலகம், வட ஆண்டாப்பட்டு உள்பட நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காலை வரை மழை பெய்தபடியே இருந்தது.மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதில் அதிகபட்சமாக வந்தவாசியில் 86 மி.மீ. மழை பதிவானது. ஆரணியில் 7, செய்யாற்றில் 5, செங்கத்தில் 25.80, ஜமுனாமரத்தூரில் 8, போளூரில் 12.80, திருவண்ணாமலையில் 52.30, தண்டராம்பட்டில் 5.60, கலசப்பாக்கத்தில் 14, சேத்துப்பட்டில் 28, கீழ்பென்னாத்தூரில் 20.80, வெம்பாக்கத்தில் 3 மி.மீ. மழை பதிவானது.

வேலூா் சாலையில் வெள்ளம்:

திருவண்ணாமலையில் இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் வேங்கிக்கால் ஏரியிலிருந்து வெளியேறிய அதிகப்படியான உபரிநீா் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.