அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோயிலில் மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட பிரதோஷ பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, வெள்ளிக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...