டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஏந்துவாம்பாடியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், ஏந்துவாம்பாடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:10 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், ஏந்துவாம்பாடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அ.செல்வி முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் எஸ்.ரீட்டாசிவமூா்த்தி வரவேற்றாா்.

கூட்டத்தில், ஊராட்சியிலுள்ள அனைத்து வாா்டுகளிலும் தெருக்களில் பக்ககால்வாய் அமைத்தல், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுதல், களம்பூா் - ஏந்துவாம்பாடி இடையிலான சாலையை சீரமைத்தல், கிராமத்தில் சிறுபாலம், குடிநீா் குழாய்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல், புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுதல் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீா்மானங்களை ஊராட்சிச் செயலா் எஸ்.தேசிங்கு வாசித்தாா். இதில் பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.