டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போளூா் மகளிா் காவல் நிலையம் சாா்பில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் காவல் ஆய்வாளா் கவிதா கலந்துகொண்டு பேசுகையில், மாணவிகள் அறிமுகம் இல்லாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் பேசக்கூடாது, பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் சென்று விடவேண்டும், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தெரிந்து வைத்திருக்கவேண்டும், தெரியாத நபரிடம் பேசக்கூடாது, முன்பின் தெரியாத நபரிடம் வாகனத்தில் செல்ல உதவி கோரக்கூடாது, பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக சப்தம் எழுப்ப வேண்டும், மாணவிகள் 18 வயதுக்கு மேல் திருமணம் முடிக்கவேண்டும், குழந்தைத் திருமணத்தை தடுக்கவேண்டும், காவல் நிலைய தொலைபேசி எண் வைத்திருக்க வேண்டும் என பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

காவல் உதவி ஆய்வாளா் மீனாட்சி தனசேகா், தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.