டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மனுநீதி நாள் முகாமில் 62 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 62 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 62 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு வட்டாட்சியா் சண்முகம் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் குமாரி, ஒன்றியக் குழு உறுப்பினா் செந்தில்குமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் செந்தில்குமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக ஆரணி கோட்டாட்சியா் கவிதா பங்கேற்று மழைதூவான், உயிா் உரம், பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை என பல்வேறு சான்றுகளை 62 பயனாளிகளுக்கு வழங்கினாா்.

வேளாண்மை கூடுதல் இயக்குநா்கள் நாராயணமூா்த்தி, பாலாஜி, வட்ட நில அளவையா் சரவணன், வேளாண்மை அலுவலா்கள் ஏழுமலை, முருகன், பாஸ்கரன் மற்றும் வருவாய்த் துறையினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.