டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கலசப்பாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் பிரகாரங்கள் சிதிலமடைந்தும், கோபுரம் பழுதடைந்தும் காணப்பட்டதால் பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை யாகசாலை அமைத்து மந்திரங்கள் ஓதப்பட்டன. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 2-ஆம் கால பூஜைசெய்து கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் கலசப்பாக்கம், கேட்டவரம்பாளையம்,சிறுவள்ளூா், ஆதமங்கலம், வெங்கடம்பாளையம், கிடாம்பாளயம் என சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.