கிணற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

கீழ்பென்னாத்தூா் அருகே நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கிய இளைஞரை, 15 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினா் சடலமாக மீட்டனா்.
கிணற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு
Updated on
1 min read

கீழ்பென்னாத்தூா் அருகே நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கிய இளைஞரை, 15 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினா் சடலமாக மீட்டனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் கிருஷ்ணசாமி (27). இவா், வியாழக்கிழமை தனது வீட்டுக்கு அருகே உள்ள விவசாயக் கிணற்றில் கை, கால் கழுவச் சென்றாா். தவறி கிணற்றுக்குள் விழுந்த அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினாா். கிணஷ்ணசாமியை பொதுமக்கள் மீட்க முயன்றனா். ஆனால், அவரை மீட்க முடியவில்லை. தகவறிந்த கீழ்பென்னாத்தூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து 15 மணி நேரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு, அவரின் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கிருஷ்ணசாமியின் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com