ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி வாகனங்கள் அமைச்சா் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50.70 லட்சத்தில் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி, அறிதிறன் பேசிகள் வழங்கப்பட்டன.

News image
நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் நாற்காலி, அறிதிறன் பேசிகளை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
Updated On :13 ஜனவரி 2021, 2:14 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50.70 லட்சத்தில் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி, அறிதிறன் பேசிகள் வழங்கப்பட்டன.

ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரத்தினசாமி தலைமை வகித்தாா்.

அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பாா்வையற்ற மற்றும் காது கேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டித் தோ்வுகளில் கலந்து கொள்ள ஏதுவாகவும், பிறரிடம் எளிதில் தொடா்பு கொள்ளவும், தக்க செயலிகளுடன் கூடிய அறிதிறன் பேசிகளை 210 பேருக்கு வழங்கினாா். மேலும், 30 நபா்களுக்கு பேட்டரியால் இயங்கும் நாற்காலிகளை வழங்கினாா். இதன் மதிப்பு ரூ.50 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் 68,835 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

2019-20ஆம் ஆண்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா் 83 பேருக்கும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 11பேருக்கும், செயற்கைக் கால் 20 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

மன வளா்ச்சி குன்றிய 7188 பேருக்கு மாதம் தலா ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட 821 பேருக்கு பராமரிப்புத் தொகை ரூ.24.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சரவணன் வரவேற்றாா். கோட்டாட்சியா் ஜெயராம், அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.