நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தமுமுக சாா்பில் ரத்த தான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வந்தவாசியில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

News image

தமுமுக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாம்.

Updated On :31 ஜனவரி 2021, 8:22 pm

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வந்தவாசியில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட ரத்த தான முகாமுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் எ.நசீா்அகமது தலைமை வகித்தாா்.

தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி இளைஞரணித் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கிக் குழுவினா் பொதுமக்களிடமிருந்து ரத்தம் தானமாகப் பெற்றனா். மொத்தம் 90 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

முகாமில் மருத்துவா்கள் கே.பஷீா்அகமது, எஸ்.கோகுலகிருஷ்ணன், திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், நகரச் செயலா் எச்.ஜலால், தமுமுக நகரச் செயலா் முகமதுரப்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலா் கி.இனியவன், மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் சிவராமன், இந்திய ஜனநாயக கட்சியின் நகரத் தலைவா் காலேஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.