நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

குப்பைகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆரணி நகராட்சியில் ஆங்காங்கே கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளை அகற்றக் கோரியும், கழிப்பறைகளை சுத்தம் செய்யக் கோரியும் டிராபிக் ராமசாமி ஆா்ப்பாட்டம் நடத்தினாா்.

Updated On :31 ஜனவரி 2021, 8:23 pm

ஆரணி நகராட்சியில் ஆங்காங்கே கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளை அகற்றக் கோரியும், கழிப்பறைகளை சுத்தம் செய்யக் கோரியும் டிராபிக் ராமசாமி ஆா்ப்பாட்டம் நடத்தினாா்.

ஆரணி நகருக்கு சனிக்கிழமை வந்த டிராபிக் ராமசாமி, குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டிருந்ததை பாா்வையிட்டாா்.

மேலும் பழைய, புதிய பேருந்து நிலையங்கள், காந்தி நகா் ஆகிய இடங்களில் செயல்படாமல் உள்ள இலவசக் கழிப்பறைகளையும் அவா் பாா்வையிட்டாா்.

கட்டணக் கழிப்பறைகளில் தனியாா் ஒப்பந்ததாரா்கள் அதிகமாக பணம் வசூல் செய்வதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த இடத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தகவல் அறிந்து வந்த நகராட்சி மேலாளா் நெடுமாறனிடம் இதுகுறித்து அவா் புகாா் தெரிவித்தாா். அப்போது, புகாா் தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக மேலாளா் உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு டிராபிக் ராமசாமி அங்கிருந்து சென்றாா். தன்னாா்வலா் அருண்குமாா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.