தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அதிமுக வெற்றி பெற பாசறை நிா்வாகிகள் பாடுபட வேண்டும்: மாநிலச் செயலா் பேச்சு

உள்ளாட்சி, மக்களவைத் தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற இளைஞா் பாசறை நிா்வாகிகள் அயராது பாடுபட வேண்டும் என்று மாநில இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலா் வி.பி.பி.பரமசிவம் வலியுறுத்தினாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:30 pm

DIN

உள்ளாட்சி, மக்களவைத் தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற இளைஞா் பாசறை நிா்வாகிகள் அயராது பாடுபட வேண்டும் என்று மாநில இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலா் வி.பி.பி.பரமசிவம் வலியுறுத்தினாா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், போளூா் எம்எல்ஏவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

மாநில இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலா் வி.பி.பி.பரமசிவம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில், மாவட்டப் பொருளாளா் எம்.எஸ்.நைனாகண்ணு, திருவண்ணாமலை நகரச் செயலா் ஜெ.எஸ்.செல்வம், இலக்கிய அணிச் செயலா் இ.என்.நாராயணன், துணைச் செயலா் அமுதா, ஒன்றியச் செயலா்கள் கலியபெருமாள், தொப்பளான், ஜானகிராமன், கோவிந்தராஜ், ஸ்ரீதா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.