இளம்பெண் தீயில் கருகி பலி: போலீஸாா் விசாரணை
வந்தவாசி அருகே திருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தீயில் கருகி உயிரிழந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


வந்தவாசி அருகே திருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தீயில் கருகி உயிரிழந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன். இவரது மனைவி முத்தம்மாள்(21).
இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. தம்பதிக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 15-ஆம் தேதி முத்தம்மாள் வீட்டில் மண்ணெண்ணை அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, புடவையில் தீப்பற்றி பலத்த தீக்காயம் அடைந்தாா்.
அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்தம்மாள் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது தாய் சுமதி அளித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
திருமணமாகி ஒன்றரை ஆண்டில் பெண் இறந்துள்ளதால், செய்யாறு கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...