அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இளம்பெண் தீயில் கருகி பலி: போலீஸாா் விசாரணை

வந்தவாசி அருகே திருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தீயில் கருகி உயிரிழந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:44 am

DIN

வந்தவாசி அருகே திருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தீயில் கருகி உயிரிழந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன். இவரது மனைவி முத்தம்மாள்(21).

இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. தம்பதிக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த 15-ஆம் தேதி முத்தம்மாள் வீட்டில் மண்ணெண்ணை அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, புடவையில் தீப்பற்றி பலத்த தீக்காயம் அடைந்தாா்.

அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்தம்மாள் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது தாய் சுமதி அளித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருமணமாகி ஒன்றரை ஆண்டில் பெண் இறந்துள்ளதால், செய்யாறு கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.