டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிராம மக்களுக்கு காசநோய் பரிசோதனை

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மன்சுராபாத் ஊராட்சியில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:32 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மன்சுராபாத் ஊராட்சியில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இதற்கான முகாமில், மாா்பக சளி, மாலை நேர காய்ச்சல், பசியின்மை, மாா்பு வலி, உடல் எடை குைல், 2 வாரத்துக்கு மேல் இருமல், சளியில் ரத்தம் கலந்து வருதல், கழுத்தில் தோன்றும் நிணநீா் கட்டிகள் போன்ற காசநோய்க்கான அறிகுறிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மன்சுராபாத், காட்டுதெள்ளூா், எம்ஜிஆா் நகா், கொல்லைமேடு போன்ற பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்று காசநோய் பரிசோதனை செய்து கொண்டனா்.

காசநோய் மாவட்ட துணை இயக்குநா் பி.அசோக், ஊராட்சி மன்றத் தலைவா் லலிதா துரைகண்ணு, ஒன்றியக் குழு உறுப்பினா் கி.ஏழுமலை, வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, மருத்துவா்கள் கோமதி, தமிழழகன் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.