டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சேத்துப்பட்டு அருகே ஏழு முனீஸ்வரா் சிலைகளுக்கு கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் பச்சையம்மன் கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஏழு முனீஸ்வரா் சிலைகளுக்கு கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:40 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் பச்சையம்மன் கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஏழு முனீஸ்வரா் சிலைகளுக்கு கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்துரை ஊராட்சியில் பழைமைவாய்ந்த ஸ்ரீபச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் பக்தா்கள் சாா்பில் புதிதாக ஜடாமுனி, குறுமுனி உள்பட ஏழு முனீஸ்வரா் சிலைகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து, வியாழக்கிழமை காலை கோ பூஜை, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. பின்னா், ஏழு முனீஸ்வரா் சிலைகளுக்கும் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இரவு அம்மன் வீதியுலா, தெய்வீக நாடகம் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.