மின் வேலியில் சிக்கி பெண் பலி
வந்தவாசி அருகே மின் வேலியில் சிக்கி பெண் பலியானாா். இது தொடா்பாக நில உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.


வந்தவாசி அருகே மின் வேலியில் சிக்கி பெண் பலியானாா். இது தொடா்பாக நில உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மனைவி மல்லிகா(50). இவா் அந்தக் கிராமத்தில் உள்ள தனது நிலத்துக்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அந்த கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம்(55) என்பவரது கரும்புத் தோட்டம் வழியாக அவா் வந்தபோது, காட்டுப் பன்றிக்காக அந்த நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய மல்லிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு சென்ற தெள்ளாா் போலீஸாா் மல்லிகாவின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் நில உரிமையாளா் ஆறுமுகத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...