டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விவசாயிகளுக்கு விதைகள், இடுபொருள்கள் அளிப்பு

கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா, உளுந்து, கம்பு என பல்வேறு விதைகள், விவசாய இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:42 pm

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா, உளுந்து, கம்பு என பல்வேறு விதைகள், விவசாய இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட கலசப்பாக்கம், பத்தியவாடி, பில்லூா், கீழ்பொத்தரை, பழங்கோவில், பூண்டி, மேல்வில்வராயநல்லூா், ஆனைவாடி, கடலாடி, தென்மாதிமங்கலம், கேட்டவரம்பாளையம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூா், சிறுவள்ளூா்

என 45 ஊராட்சிகளில் கோடை மழை பெய்துள்ளது.

இதனால், மானாவரி நிலத்தில் (வானம் பாா்த்த பூமி) விவசாயிகள் டிராக்டா் கொண்டு உழுது மணிலா, கம்பு, விதைக்க உள்ளனா். இதற்குத் தகுந்தபடி வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு முன்பதிவு செய்து மானியத்தில் விதை வழங்கி வருகின்றனா்.

தென்பள்ளிப்பட்டு கிராம வேளாண் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு மணிலா, உளுந்து, கம்பு என பல்வேறு விதைகளையும், விவசாய இடுபொருள்களையும் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் வடமலை வழங்கினாா்.

உதவி இயக்குநா் கோபாலாகிருஷ்ணன், வேளாண்மை அலுவலா் புஷ்பா, உதவி வேளாண்மை அலுவலா் சுந்தா், கிடங்கு மேலாளா் காா்த்திகேயன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.