நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரணியில் 13 கடைகளுக்கு ‘சீல்’

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பொது முடக்க விதிகளை மீறி வெள்ளிக்கிழமை திறந்திருந்த 13 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 5:46 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பொது முடக்க விதிகளை மீறி வெள்ளிக்கிழமை திறந்திருந்த 13 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆரணியில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஜெயச்சந்திரன், சிவக்குமாா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் குமரவேல் ஆகியோா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, செயல்படுவதற்கு அரசு சாா்பில் அனுமதி அளிக்கப்படாத நிலையில், ஆரணி சந்தைமேடு பகுதியில் திறக்கப்பட்டிருந்த ஜவுளிக் கடைகள், வடக்கு மாட வீதியில் திறக்கப்பட்டிருந்த முடி திருத்தும் கடைகள், பாத்திரக் கடைகள், அழகு நிலையம், இரும்பு கம்பி விற்பனைக் கடை உள்ளிட்ட 13 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.