குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவிகள்
கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூா், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா 2-ஆவது தவணை நிதி, அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது.


கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூா், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா 2-ஆவது தவணை நிதி, அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது.
கலசப்பாக்கத்தை அடுத்த பழங்கோவில் ஊராட்சியில் உள்ள நியாய விலைக் கடையில் கரோனா நிவாரணம் 2-ஆவது தவணைத் தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசிராஜசேகரன் தலைமை வகித்தாா்.
தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...