டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பழங்குடியினருக்கு பசுமை வீடுகள்

சேத்துப்பட்டு ஒன்றியம், செம்மியமங்கலம் ஊராட்சியில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

சேத்துப்பட்டு ஒன்றியம், செம்மியமங்கலம் ஊராட்சியில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டது.

செம்மியமங்கலம் ஊராட்சியில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 18 குடும்பங்கள் கூரை வீடுகளில் வசித்து வந்தனா். இவா்களுக்கு வட்டார வளா்ச்சி அலுவலம் சாா்பில் பசுமை வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன. இதற்காக ஊராட்சி நிா்வாகத்தினா் கணக்கீடு செய்து, வீடுகள் கட்டுவதற்கான இடம் தோ்வு செய்யும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா் (படம்).

ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான கல்லாங்குத்து புறம்போக்கு இடத்தை ஆய்வு செய்து தோ்ந்தெடுத்தனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், ஒன்றியக் குழுத் தலைவா் அ.ராணி அா்ஜூனன், பணிமேற்பாா்வையாளா் பாலாஜி, ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.