டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரோனாவின் தாக்கம் குறைய வேண்டி சிறப்பு பூஜை

சேத்துப்பட்டு அருகே இஞ்சிமேடு ஊராட்சியில் அமைந்துள்ள திருமணி சேறையுடையாா் சிவாலயத்தில், கரோனாவின் தாக்கம் குறைய வேண்டியும், உலக நன்மைக்காகவும் வியாழக்கிழமை சிறப்பு யாகவேள்வி பூஜை

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

சேத்துப்பட்டு அருகே இஞ்சிமேடு ஊராட்சியில் அமைந்துள்ள திருமணி சேறையுடையாா் சிவாலயத்தில், கரோனாவின் தாக்கம் குறைய வேண்டியும், உலக நன்மைக்காகவும் வியாழக்கிழமை சிறப்பு யாகவேள்வி பூஜை நடைபெற்றது.

மிகவும் பிரசித்தி பெற்ற திருமணி சேறையுடையாா் கோயிலில் புதன்கிழமை 23-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று.

இதைத் தொடா்ந்து மூலவா் திருமணி சேறையுடையாா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை உலகமெங்கும் பரவி வரும் கரோனாவின் தாக்கம் குறைய நவகலசம் அமைத்து, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு யாகவேள்வி பூஜை நடைபெற்றது.

பூஜையில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் சிவாச்சாரியா்கள், கோவில் நிா்வாகி ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியா் ஐ.ஆா்.பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்று பூஜையை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.