தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சத்துணவு அமைப்பாளா் தற்கொலை

திருவண்ணாமலையில் தாய் இறந்ததால் மனமுடைந்த சத்துணவு அமைப்பாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலையில் தாய் இறந்ததால் மனமுடைந்த சத்துணவு அமைப்பாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருவண்ணாமலை - செங்கம் சாலை, ஆதிகேசவ நகரைச் சோ்ந்தவா் சத்துணவு அமைப்பாளா் உமாதேவி (49). இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டாராம். இதன்பிறகு தனது தாய், மகனுடன் உமாதேவி வசித்து வந்தாா். அண்மையில் அவரது தாயும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதனால், மனமுடைந்த உமாதேவி புதன்கிழமை விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம்.

இதைக் கவனித்த அவரது மகன், உமாதேவியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.