ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பெண் தூக்கிட்டு சாவு: கோட்டாட்சியா் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே  பெண் தூக்கிட்டு இறந்தது குறித்து கோட்டாட்சியா் விசாரணை

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மோரணம் பள்ளத் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவரது மனைவி திவ்யா (27). இவா்களுக்கு 2018-இல் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திவ்யா ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்து திவ்யாவின் சகோதரி லீலா பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் மோரணம் காவல் நிலைய ஆய்வாளா் முரளிதரன் வழக்குப் பதிந்து, சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். திவ்யா வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்தாரா என போலீஸாா் விசாரிக்கின்றனா். இதுதொடா்பாக செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் என்.விஜயராஜும் திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.