நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் முதல்கட்ட பிரசார பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 6 நாட்களுக்கான பிரசார திட்டத்தை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சீமான் வரும் திங்கட்கிழமை(மார்ச் 23) தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கி 28ஆம் தேதி நிறைவு செய்கிறார்.
திருத்தணி முருகன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார்.
தொடர்ந்து, அன்றைய நாளில் சோளிங்கர், ராணிப்பேட்டையில், 24-ஆம் தேதி வேலூர், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர், ஊத்தங்கரையிலும், 25-ஆம் தேதி கிருஷ்ணகிரி, சூளகிரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டியிலும் சீமான் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பின்னர் 26ஆம் தேதி மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி, ஆத்தூர், கள்ளக்குறிச்சியிலும், 27ஆம் தேதி சங்கராபுரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, வந்தவாசியிலும் பிரசாரம் செய்கிறார்.
இறுதியாக 28ஆம் தேதி காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடியில் வாக்கு சேகரிக்கிறார்.
Summary
The first phase of the campaign tour plan of Naam Tamilar Party Chief Coordinator Seeman has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










