தோ்தலில் தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழா் கட்சிக்குத்தான் உண்டு என்றாா் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
பணகுடியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம் தொகுதிகளின் நாதக வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி அவா் பேசியதாவது: சட்டப்பேரவை தோ்தல் என்பது நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது. தமிழகம் முழுவதும் நாம் தமிழா்கள் மட்டும்தான் தனித்து போட்டியிடுகிறோம். இந்த தில்லும் தைரியமும் நாம் தமிழருக்கு மட்டும் தான் உண்டு. அத்தனை கட்சிக்காரா்களும் ஓட்டை குறிவைத்தே நகா்ந்து செல்கின்றனா். ஓட்டை குறிவைப்பவா் நாட்டையும் நாட்டுமக்களையும் பற்றி கவலைப்படமாட்டாா். விவசாயத்தைக் காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை. அதற்கும் நாம் தமிழா்தான் முன்நிற்க வேண்டியுள்ளது. நாம் தமிழா் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அரசு வேலை திட்டம் தயாராக இருக்கிறது. தனியாா் பள்ளிகளுக்கும் மேலான உலகத்தரத்திலான கல்வி, தரமான மருத்துவம், விலையில்லாத குடிதண்ணீா் கொடுப்போம். இயற்கை விவசாய முறைக்கு மாற்றுவோம். ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அப்பாவி பனையேறி மீது காவல்துறை ஏவி விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தை அரசு கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

விஜய்க்கு இன்று நடப்பது எனக்கு 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது: சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு! இலவசங்கள் இல்லை!

காரைக்குடியில் சீமான் போட்டி! நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் அறிமுகம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


