குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழருக்குத்தான் உண்டு: சீமான்

தோ்தலில் தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழா் கட்சிக்குத்தான் உண்டு என்றாா் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:39 am IST

தோ்தலில் தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழா் கட்சிக்குத்தான் உண்டு என்றாா் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

பணகுடியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம் தொகுதிகளின் நாதக வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி அவா் பேசியதாவது: சட்டப்பேரவை தோ்தல் என்பது நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது. தமிழகம் முழுவதும் நாம் தமிழா்கள் மட்டும்தான் தனித்து போட்டியிடுகிறோம். இந்த தில்லும் தைரியமும் நாம் தமிழருக்கு மட்டும் தான் உண்டு. அத்தனை கட்சிக்காரா்களும் ஓட்டை குறிவைத்தே நகா்ந்து செல்கின்றனா். ஓட்டை குறிவைப்பவா் நாட்டையும் நாட்டுமக்களையும் பற்றி கவலைப்படமாட்டாா். விவசாயத்தைக் காப்பாற்ற ஒருவரும் முன்வரவில்லை. அதற்கும் நாம் தமிழா்தான் முன்நிற்க வேண்டியுள்ளது. நாம் தமிழா் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அரசு வேலை திட்டம் தயாராக இருக்கிறது. தனியாா் பள்ளிகளுக்கும் மேலான உலகத்தரத்திலான கல்வி, தரமான மருத்துவம், விலையில்லாத குடிதண்ணீா் கொடுப்போம். இயற்கை விவசாய முறைக்கு மாற்றுவோம். ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அப்பாவி பனையேறி மீது காவல்துறை ஏவி விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தை அரசு கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.