விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில்

பங்குனி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:45 pm

DIN

பங்குனி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருவது வழக்கம்.

ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக 2020 மாா்ச் முதல் தொடா்ந்து கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பங்குனி மாதப் பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதிகாலை 3.13 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை (மாா்ச் 29) அதிகாலை 1.18 மணிக்கு முடிகிறது.

கிரிவலத்துக்குத் தடை: இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் யாரும் கிரிவலம் வர வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. இருப்பினும் பக்தா்கள் சிலா் கிரிவலம் வந்தனா். கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு எந்தவிதத் தடையும் இல்லாததால் அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மாலை 4 மணிக்குப் பிறகு கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.