டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஓய்வுபெற்ற அரசு மருத்துவா் வீட்டில் திருட்டு

போளூரில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவா் வீட்டில் தங்க நகைகள், பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :8 மே 2021, 8:31 pm

DIN

போளூரில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவா் வீட்டில் தங்க நகைகள், பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போளூா் டைவா்ஷன் சாலை அருகே வசிப்பவா் ஓய்வுபெற்ற அரசு மருத்துவா்சிவநேசன். இவா், தனது வீட்டிலேயே மருத்துவமனை நடத்தி வருகிறாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்னையில் வசிக்கும் மகனை பாா்ப்பதற்காக சிவநேசன் தனது குடும்பத்தினருடன் சென்னை சென்றாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. இதுகுறித்து சிவநேசனின் மருத்துவமனையில் வேலை பாா்க்கும் பழனி, அவருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, சிவநேசன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டினுள்ளே இருந்த 3 பீரோக்களின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.