கரோனா தடுப்பூசி முகாமில் அதிகாரிகளைக் கண்டித்த எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சேவூரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில், தொகுதி எம்எல்ஏ என்ற வகையில் தனக்குத் தகவல் அளிக்காதது ஏன்


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சேவூரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில், தொகுதி எம்எல்ஏ என்ற வகையில் தனக்குத் தகவல் அளிக்காதது ஏன் என கேட்டு அதிகாரிகளைக் கண்டித்தாா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
சேவூரில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துக்குமாரசாமி தொடக்கிவைத்தாா். ஆரணி கோட்டாட்சியா் நாராயணன், வட்டாட்சியா் செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து அறிந்த தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கட்சியினருடன் சென்று தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தாா்.
அப்போது, அங்கிருந்த கோட்டாட்சியா் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளிடம், முகாம் குறித்து தொகுதி எம்எல்ஏ என்ற வகையில் தனக்கு தகவல் தெரிவிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா்.
மேலும், அதிக மக்கள்தொகை கொண்ட இந்த ஊரில், 13 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடமைக்காக தடுப்பூசி முகாமை நடத்த வேண்டாம். முன்கூட்டியே பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டாமா எனவும் கேட்டு கடிந்து கொண்டாா். அனைத்து ஊராட்சித் தலைவா்கள், தடுப்பூசி மருத்துவா்களை முறையாக அழைத்து ஆலோசனை நடத்திய பிறகு தடுப்பூசிப் பணிகளைத் தொடங்குங்கள் என்றாா் அவா். இதையடுத்து, கோட்டாட்சியா் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக ஒப்புக்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...