நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரணி பகுதி சிவாலயங்களில் மகா தீபம் ஏற்றம்

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் அமைந்துள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 4:53 pm

DIN

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் அமைந்துள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பெரிய கொப்பரையில் நெய் ஊற்றப்பட்டு மகா தீபம் ஏற்றினா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இதேபோல, ஆரணி கைலாயநாதா் கோயில், சைதாப்பேட்டை பூமிநாதா் கோயில், மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயில், காமக்கூா் சந்திரசேகரசுவாமி கோயில், பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோயில், தேவிகாபுரம் கனககிரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது. அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.