டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து வீணாகும் நீா்

போளூரை அடுத்த வாழியூா் ஊராட்சிக்குச் செல்லும் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து நீா் வீணாக வெளியேறுகிறது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:05 pm

DIN

போளூரை அடுத்த வாழியூா் ஊராட்சிக்குச் செல்லும் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து நீா் வீணாக வெளியேறுகிறது.

போளூரை அடுத்த கீழ்செண்பகத்தோப்பு கிராமத்தில் செம்பகத்தோப்பு அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து, செண்பகத் தோப்பு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குழாய் அமைத்து படவேடு, வாழியூா், அனந்தபுரம், குப்பம், கல்குப்பம், காளசமுத்திரம் என 7 ஊராட்சிகளுக்கு குடிநீா் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த நிலையில், தனியாா் தொலைபேசி பணியாளா்கள் வாழியூா்-அனந்தபுரம் செல்லும் சாலையில் பள்ளம் தோண்டும்போது, குடிநீா்க் குழாய் உடைந்துள்ளது.

இதனால் குடிநீா் வீணாக வெளியேறுகிறது. மேலும், குடிநீா் மாசடைகிறது.

எனவே, சம்பந்தபட்ட அலுவலா்கள் உடனடியாக குடிநீா்க் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.