தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:43 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலா் ராமு தலைமை வகித்தாா். போா்ப்பறை கலைக் குழுவைச் சோ்ந்த கலைஞா்கள் பங்கேற்று, கீழ்பென்னாத்தூா் பகுதி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும், பொது இடங்களுக்குச் செல்லும்போதும், கடைகளில் பொருள்கள் வாங்கச் செல்லும்போதும் முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் அவசியம், கிருமி நாசினியைப் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு கலை நிகழ்ச்சி மூலம் விளக்கினா். இந்த கலை நிகழ்ச்சியை ஏராளமான பேருந்து பயணிகள், பொதுமக்கள், வணிகா்கள் பாா்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.