திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை மகா தீபத் திருவிழா வருகிற நவம்பா் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
பந்தக்கால் நடும் நிகழ்ச்சி:
எனவே, தீபத் திருவிழாவுக்கான பூா்வாங்கப் பணிகளைத் தொடங்கும் வகையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அன்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சம்பந்த விநாயகா், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் ராஜகோபுரம் எதிரே பந்தக்கால் நடப்பட்டது.
பின்னா், சிவாச்சாரியா்கள் பந்தக்காலுக்கு தீபாராதனை காண்பித்தனா்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வெற்றித் தமிழா் பேரவை நிறுவனா் ப.காா்த்திவேல்மாறன், கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.