டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கே.சி. வீரமணியின் மாமனாா் வீட்டில் சோதனை

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே குருவிமலை ஊராட்சியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணியின் மாமனாா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே குருவிமலை ஊராட்சியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணியின் மாமனாா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணியின் மாமனாா் பழனி வீடு உள்ளது.

இங்கு வியாழக்கிழமை காலை 8 மணியளவில் வந்த, மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி மதியழகன், காவல் ஆய்வாளா்கள் மைதிலி, அன்பழகன் உள்ளிட்டோா் அடங்கிய 10 போ் குழுவினா் சோதனை நடத்தினா்.

மேலும், அதே கிராமத்தில் உள்ள பழனியின் தம்பியும், ஊராட்சி மன்றத் தலைவருமான காா்த்திகேயன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இவ்விரு வீடுகளிலும் வியாழக்கிழமை மாலை வரை நடைபெற்ற சோதனையில் வீட்டு மனைப் பத்திரங்கள், வங்கிப் புத்தகம் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.