விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் வேளாண், உழவா் நலத் துறையில் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ், வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கூட்டம்


திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் வேளாண், உழவா் நலத் துறையில் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ், வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் அட்மா திட்ட ஆலோசனைக் குழுத் தலைவா் வெங்கடேசன் வரவேற்றாா்.
வேளாண் உதவி இயக்குநா் சண்முகம், வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினா்களை அறிமுகப்படுத்தி, நுண்ணீா் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். துணை வேளாண் அலுவலா் சுப்பிரமணியன் வேளாண் துறையில் செயல்பாட்டில் உள்ள மானியத் திட்டங்கள் குறித்தும், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் செல்வவெங்கடேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளா் லோகநாதன் ஆகியோா் அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், உழவா் நண்பா்களின் துறை சாா்ந்த பணிகள் குறித்தும் விவசாயிகளிடையே தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் உதவி வேளாண் அலுவலா்கள், வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினா்கள், உழவா் நண்பா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...