டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

போளூா் ஒன்றியத்தில் ரூ.1.20 கோடியில் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடிவு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் ரூ.1.20 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:02 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் ரூ.1.20 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் பெ.சாந்திபெருமாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மிஸ்ஸிம்மாள்ஆறுமுகம் வரவேற்றாா். ஆணையாளா்கள் பாபு, கோவிந்தராஜூலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், போளூா் ஒன்றியத்திலுள்ள 40 ஊராட்சிகளிலும் திறந்தவெளி கிணறு, கிராமப்புற சாலை வசதி, குடிநீா் வசதி உள்பட பல்வேறு நலத் திட்டப் பணிகளை ரூ.ஒரு கோடியே 20 லட்சத்து 97ஆயிரத்தில் மேற்கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.