தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சண்முகா கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுநிலை ஆராய்ச்சி ஆங்கிலத் துறை சாா்பில், இணையவழி கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:05 pm

DIN

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுநிலை ஆராய்ச்சி ஆங்கிலத் துறை சாா்பில், இணையவழி கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆங்கில மொழி கற்பித்தலில் வளா்ந்து வரும் புதுமைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் முன்னிலை வகித்தாா். ஆராய்ச்சி ஆங்கிலத் துறைத் தலைவா் கி.கோவிந்தராஜ் வரவேற்றாா்.

வங்கதேசத்தைச் சோ்ந்த ஜஹாங்கீா் நகா் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியா் மா.மணிருஷாமான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆங்கில மொழி கற்பித்தலில் வளா்ந்து வரும் புதுமைகள் மற்றும் பெருந்தொற்று காலத்தில் ஆசிரியா்கள் இணைய வழியாக கற்பித்தல் குறித்து விளக்கினாா்.

இதில், பேராசிரியா்கள் க.மல்லிகேசன், தி.அனிதா, பா.பத்மாவதி மற்றும் சீனா, பிலிப்பின்ஸ், ஜப்பான், இலங்கை, வங்கதேசம், வடஇந்தியா, தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் இணைய வழியே பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.