தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

10, 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை பள்ளிகளில் பதிவு செய்ய ஏற்பாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிகளிலேயே கல்வித் தகுதியை பதிவு செய்ய மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:16 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிகளிலேயே கல்வித் தகுதியை பதிவு செய்ய மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்து, பிளஸ் 2

வகுப்புகளில் தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணியும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தோ்ச்சி மாணவ-மாணவிகள் கல்வித் தகுதியை பதிவு செய்ய ஆதாா் அடையாள அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

செப்டம்பா் 17-ஆம் தேதி முதல் அக்டோபா் 1-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப் பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.

இதுதவிர,  இணையதளம் வழியாகவும் மாணவ-மாணவிகள் கல்வித் தகுதியை பதிவு செய்துகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.