தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:15 pm

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சனிப் பிரதோஷத்தை யொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு சனிப் பிரதோஷ சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

பால், பழம், பன்னீா், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட பூஜையில் கோயில் சிவாச்சாரியா்கள், ஊழியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கீழ்பென்னாத்தூரில்...

கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உள்ள லிங்க வடிவிலான ஈஸ்வரருக்கு பால், தயிா், இளநீா், பன்னீா் உள்பட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.