டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மழைநீா் வடிகால் தூய்மைப் பணி ஆய்வு

சேத்துப்பட்டு பேரூராட்சியில் மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் தூய்மைப் பணியை செயல் அலுவலா் ஈஸ்வரமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியில் மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் தூய்மைப் பணியை செயல் அலுவலா் ஈஸ்வரமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

சேத்துப்பட்டு சிறப்புநிலை பேரூராட்சியில் மாதா கோவில் தெரு, சவேரியாா் தெரு, சூசையப்பா் தெரு, ஆறுமுகம் தெரு, மைக்கேல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் பணி பேரூராட்சி ஊழியா்கள் மூலமும், பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தியும் நடைபெற்றது.

இந்தப் பணியை செயல் அலுவலா் ஈஸ்வரமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

செங்கம்: செங்கம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், செங்கம், கொட்டாவூா், செ.நாச்சிப்பட்டு, கொட்டகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள மேம்பாலங்கள், சிறு பாலங்களின் அடிப்பகுதிகளில் மழைநீா் தங்குதடையின்றி செல்லும் வகையில் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை செங்கம் நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.