புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு

ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்த கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:17 pm

DIN

ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்த கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சிப் பொறியாளா் இராஜவிஜய காமராஜ் வரவேற்றாா்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி பேசுகையில், பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் நிலத்தடி நீா்மட்டம் குறைகிறது. அவற்றை உண்ணும் மாடுகளும் இறந்து விடுகின்றன.

14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் மாற்றுப்பொருள்கள் என்னென்ன என்பது குறித்தும் விளக்கப்பட்டு வருகிறது.

ஆரணியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்ற நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, வட்டாட்சியா் பெருமாள், காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள், வியாபாரிகள், சேவை சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.