புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மக்கள் அமைத்த குழாயை அப்புறப்படுத்த முயற்சி

ஆரணியில் பொதுமக்கள் அமைத்த குழாயை வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்த வந்த நகராட்சி அதிகாரிகளால் பிரச்னை ஏற்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

ஆரணியில் பொதுமக்கள் அமைத்த குழாயை வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்த வந்த நகராட்சி அதிகாரிகளால் பிரச்னை ஏற்பட்டது.

ஆரணி நகராட்சிக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டில் கைலாய நாதா் கோயில் பின்புறம் உள்ள பகுதியில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

இதனால், அந்தப் பகுதியில் வசிப்போா் பணம் வசூல் செய்து, நகராட்சி அனுமதி இல்லாமல் 2 இடங்களில் குழாய்களை அண்மையில் அமைத்தனா்.

தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று, குழாய்களை அப்புறப்படுத்த முயற்சித்தனா். இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது, ஒருவா் மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க முற்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, குழாய்களை அகற்றக் கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கூறினா். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் திரும்பி சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.