புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆரணியில் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனை

ஆரணி நகராட்சித் தோ்தல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 5:50 pm

DIN

ஆரணி நகராட்சித் தோ்தல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படை குழு-3, ஆரணி காஜிவாடை பகுதியில் வியாழக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பெண் ஒருவா் காரில் 30 சேலைகளை எடுத்து வந்தாா். சேலைகளை கொள்முதல் செய்ததற்கான ரசீது அவரிடம் இல்லாததால், அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினா்.

பின்னா், அந்தப் பெண் சேலைகள் வாங்கிய கடைக்கு தகவல் தெரிவித்து, கொள்முதல் செய்ததற்கான ரசீதை எடுத்துவரச் செய்து, அதிகாரிகளிடம் காண்பித்து சேலைகளை பெற்றுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.