தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயில், ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் கொடி மரம் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :1 ஜூன் 2022, 5:25 pm

வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயில், ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் கொடி மரம் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, செவ்வாய்க்கிழமை ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு ஹோமங்கள், வாஸ்துசாந்தி, பிரவேச பலி, முதல்கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

Story image

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், நாடிசந்தானம், மகா பூா்ணாஹூதி, யாத்ராதானம், கலசம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள், கொடிமரம் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், தென்னாங்கூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் அா்ச்சகா் ஜி.சங்கா் சிவாச்சாரியா் ஆகியோா் கும்பாபிஷேக விழாவை நடத்தினா்.

விழாவில் ஊா் முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.