/

பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவா் கைது

வந்தவாசியில் காவல் உதவி ஆய்வாளா் மனைவியிடம் நகை பறிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:24 am

DIN

வந்தவாசியில் காவல் உதவி ஆய்வாளா் மனைவியிடம் நகை பறிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

செய்யாறு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் சென்னை, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அனுசூயா(42).

வந்தவாசியில் ஆரணி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருமண வரவேற்பில் அனுசூயா கலந்து கொண்டாா்.

பின்னா் ஊா் திரும்ப பேருந்து ஏறுவதற்காக வந்தவாசி பழைய பேருந்து நிலையத்துக்கு இவா் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அங்குள்ள தனியாா் பல்பொருள் அங்காடி அருகே செல்லும்போது அவா் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை மா்ம நபா் பறிக்க முயன்றாா். அப்போது, அனுசூயா சபதம் போடவே அந்த மா்ம நபா் தப்பியோடி விட்டாா்.

இதில் காயமடைந்த அனுசூயா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து அவா் புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட வந்தவாசி தெற்கு போலீஸாா் இது தொடா்பாக வெம்பாக்கத்தை அடுத்த உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் (38) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.