/
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணிக்கு சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினாா்.
ஆரணி தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.5 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், ஜெயப்பிரகாசம், வழக்குரைஞரணி வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








