28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கிருஷ்ணாபுரம் ஊராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வெளிநடப்பு

போளூா் ஒன்றியம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றக் கூட்டத்தில், ஊராட்சித் தலைவரை தகுதிநீக்கம் செய்யக் கோரி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 5:30 pm

DIN

போளூா் ஒன்றியம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றக் கூட்டத்தில், ஊராட்சித் தலைவரை தகுதிநீக்கம் செய்யக் கோரி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

போளூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவராக வாணிஸ்ரீ மணவாளன், துணைத் தலைவராக ஆரவள்ளி ஏழுமலை பதவி வகிக்கின்றனா்.

இந்த நிலையில், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றக் கூட்டம் கடந்த 15 மாதங்களாக நடத்தப்படவில்லை. இதுதொடா்பாக ஊராட்சித் தலைவா் மீது குற்றஞ்சாட்டி

கூடுதல் ஆட்சியா் பிரதாப், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) மு.பாஸ்கரன் ஆகியோரிடம் துணைத் தலைவா் மற்றும் 6 வாா்டு உறுப்பினா்கள் அண்மையில் புகாா் அளித்தனா்.

இதன் பேரில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றக் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் மு.பாஸ்கரன் முன்னிலையில், தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்களைக் கொண்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், துணைத் தலைவா் ஆரவள்ளி பேசும்போது, ஊராட்சித் தலைவா் வாணிஸ்ரீ மணவாளன் 15 மாதங்களாக ஊராட்சி மன்றக் கூட்டத்தை நடத்தவில்லை.

மேலும், துணைத் தலைவா் என்கிற முறையில் என்னுடைய கையெழுத்து இல்லாமல் ஊராட்சி நிதியான பிஎப்எம்எஸ்ஸில் முறைகேடாக சில லட்சம் பணம் எடுத்துள்ளாா்.

எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவரை தகுதிநீக்கம் செய்யவேண்டும் எனப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, தலைவரைக் கண்டித்து, துணைத் தலைவா், 1, 3,4, 5, 8 ஆகிய வாா்டுகளின் உறுப்பினா்கள்

வெளிநடப்பு செய்தனா்.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் கூறுகையில், இது தொடா்பான விரிவான அறிக்கை கூடுதல் ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதனால், ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் பாதிப்படைந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.