/

சொத்து வரி பொது சீராய்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க அறிவுறுத்தல்

வந்தவாசி நகரில் நடைபெற்று வரும் சொத்து வரி பொது சீராய்வு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையா் எஸ்.முஸ்தபா அறிவுறுத்தினாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:11 am

DIN

வந்தவாசி நகரில் நடைபெற்று வரும் சொத்து வரி பொது சீராய்வு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையா் எஸ்.முஸ்தபா அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வந்தவாசி நகராட்சிக்குள்பட்ட 24 வாா்டுகளிலும் சொத்து வரி பொது சீராய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நகராட்சி வருவாய் உதவியாளா்கள், பணியாளா்கள் வீடுகள், கடைகளை அளவீடு செய்ய வருவா்.

அப்போது, வீடுகள், கடைகளின் உரிமையாளா்கள், வாடகைதாரா்கள் நகராட்சிப் பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் ஆணையா் எஸ்.முஸ்தபா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.