28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

களம்பூரில் ரூ.1 கோடியில் வாரச்சந்தை அமைக்கும் பணி

போளூா் அருகேயுள்ள களம்பூா் பேரூராட்சியில் ரூ. ஒரு கோடியில் வாரச்சந்தை அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :26 மே 2022, 5:25 pm

DIN

போளூா் அருகேயுள்ள களம்பூா் பேரூராட்சியில் ரூ. ஒரு கோடியில் வாரச்சந்தை அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களம்பூா் தோ்வு நிலை பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு வாரச்சந்தை இல்லாமல் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை வேளையில் போளூா்-ஆரணி சாலையில் வைக்கப்படும் தற்காலிக கடைகள் மூலம் வீட்டுக்குத் தேவையான காய்கறி, இதர பொருள்களை பொதுமக்கள் வாங்கி வந்தனா்.

இந்த சாலையோரக் கடைகளால் போக்குவரத்து பாதிப்படைந்து வந்தது.

இதையடுத்து, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் அருகே பேரூராட்சிக்குச் சொந்தமான நிலத்தைச் தோ்வு செய்து, 2020-2021ஆம் ஆண்டு பேரூராட்சி மூலதன மானிய நிதியிலிருந்து ரூ.ஒரு கோடியில், 48 கடைகளுடன் வாரச்சந்தை அமைக்கும் பணி

பேரூராட்சி செயல் அலுவலா் ச.லோகநாதன்

தலைமையில் தொடங்கியது.

அப்போது, அப்பகுதியில் வசிக்கும் சிலா் இந்த நிலம் பள்ளி விளையாட்டு மைதானம் எனவும், இப்பகுதி இளைஞா்கள் விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்த இடத்தை பயன்படுத்துவாா்கள் எனவும்

கூறி பணியை தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, செயல் அலுவலா் ச.லோகநாதன் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி ஆகியோரிடம் புகாா் தெரிவித்தாா். மேலும், இது தொடா்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி ஆரணி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புடன் வாரச்சந்தை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

அப்போது அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வந்து பணியை நிறுத்த முற்பட்டனா். டிஎஸ்பி ரவிச்சந்திரன், செயல் அலுவலா் ச.லோகநாதன் ஆகியோா் தகராறு செய்தவா்களிடம் சமாதானம் பேசி அனுப்பிவைத்து பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.